கந்து வட்டிக் கொடுமைக்கு இளைஞர் பலி

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் தாராபுரம் பகுதியில் கந்து வட்டிக்காரர்களின் கொடுமையைத் தாங்க முடியாத இளைஞர்தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

தாராபுரத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவர் வட்டிக்குப் பணம் வாங்கி பேக்கரி வைத்து நடத்தி வந்தார். சுமாரானவருமானமே வந்ததால் பணத்தைத் திருப்பிக் கட்ட திணறினார். இருப்பினும் வட்டியை மட்டும் தவறாமல்கொடுத்து வந்தார்.

கொடுத்த பணத்தை எல்லாம் வட்டிக்கே கழித்தார் கடன் கொடுத்தவர். அசல் குறையவே இல்லை.

ஒரு கட்டத்தில் வட்டி கூட கட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கந்து வட்டிக்குக் கொடுத்த கும்பல்கதிர்வேலுவை மிரட்ட ஆரம்பித்தனர்.

இதனால் பயந்து போன அவர் தன் மீது மண்ணெண்ணை ஊற்றித் தீவைத்துக் கொண்டார். இதைப் பார்த்து அலறியகதிர்வேலுவின் தங்கை மஞ்சுளா, அண்ணன் பாண்டியன் ஆகியோர் அவரைக் காப்பாற்ற முயன்றனர். இதில்,அவர்களுக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

3 பேரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல்கதிர்வேலு பரிதாபமாக இறந்தார்.

இவருக்குக் கடன் கொடுத்தவர்கள் 40 சதவீதத்துக்கும் அதிகமாக வட்டி வசூல் செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+