கந்து வட்டிக் கொடுமைக்கு இளைஞர் பலி
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் தாராபுரம் பகுதியில் கந்து வட்டிக்காரர்களின் கொடுமையைத் தாங்க முடியாத இளைஞர்தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
கொடுத்த பணத்தை எல்லாம் வட்டிக்கே கழித்தார் கடன் கொடுத்தவர். அசல் குறையவே இல்லை.
ஒரு கட்டத்தில் வட்டி கூட கட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கந்து வட்டிக்குக் கொடுத்த கும்பல்கதிர்வேலுவை மிரட்ட ஆரம்பித்தனர்.
இதனால் பயந்து போன அவர் தன் மீது மண்ணெண்ணை ஊற்றித் தீவைத்துக் கொண்டார். இதைப் பார்த்து அலறியகதிர்வேலுவின் தங்கை மஞ்சுளா, அண்ணன் பாண்டியன் ஆகியோர் அவரைக் காப்பாற்ற முயன்றனர். இதில்,அவர்களுக்கும் தீக்காயம் ஏற்பட்டது.
3 பேரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல்கதிர்வேலு பரிதாபமாக இறந்தார்.
இவருக்குக் கடன் கொடுத்தவர்கள் 40 சதவீதத்துக்கும் அதிகமாக வட்டி வசூல் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications