கேரள கவுன்சிலர் கொலை: பெங்களூருக்கு போலீஸ் படை விரைந்தது
சென்னை:
கேரளாவைச் சேர்ந்த கவுன்சிலர் பிரசாத் சென்னையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் பணத் தகராறும் ஒருகாரணமாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் அவரது பெண் நண்பி இந்திராவும், அவரது கார் டிரைவர் ஆனந்த் என்பவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் அப்பு, சதீஷ், முரளி, சஞ்சீவி ஆகிய நால்வரையும் கைது செய்துள்ளனர்.
இந்த நால்வரும் கொலையை எப்படிச் செய்தோம் என்பதை போலீசாரிடம் நடித்துக் காட்டினர். பிரசாத்தின்கொலைக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என இந்திரா மறுத்து வருகிறார். பிரசாத்துக்கு பணம்கொடுத்தவர்கள் பெங்களூரில் இருப்பதாகவும் அவர்களுக்கும் பிரசாத்துக்கும் இடையே தகராறு இருந்துவந்ததாகவும் புதிய தகவலையும் தந்துள்ளார் இந்திரா.
இதையடுத்து அந்தக் கோணத்திலும் தமிழக போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். அவர் கொடுத்ததகவலை வைத்து ஒரு படை பெங்களுருக்கும் சென்றுள்ளது.
இந் நிலையில் தமிழக காவல் துறையில் உள்ள கேரளத்தைச் சேர்ந்த சில மூத்த அதிகாரிகள் இந்திராவைக்காப்பாற்றவும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.
- கள்ள தொடர்பு.. டிரைவருடன் காதல்..: கேரள கவுன்சிலர் கொலையில் அவிழும் மர்ம முடிச்சுகள்
- கேரள கவுன் சிலர் சென்னையில் மாயம்: கேர்ள் பிரண்ட் கைது