சோ.பாகிருஷ்ணனை நீக்க காங்கிரஸ் தலைமை முடிவு
டெல்லி:
தமிழக காஙகிரஸ் தலைவர் சோ.பாலகிருஷண்னனை நீக்கிவிட கட்சி மேலிடம் முடிவு செய்துவிட்டதாகத்தெரிகிறது.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியை வழி நடத்த பத்துக்கும் மேற்பட்ட கோஷ்டித் தலைவர்களைக் கொண்ட குழுவைதமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கமல் நாத் நியமித்தார். வழிகாட்டுக் குழு என்ற பெயர் கொண்ட கோஷ்டித்தலைவர்களின் கூட்டம் டெல்லியில் சமீபத்தில் நடந்தது.
அதில் பேசிய அனைவருமே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இரு தலைவர்கள் (சோ.பாலகிருஷ்ணன் மற்றும்செயல் தலைவர் இளங்கோவன்) இருப்பதை விரும்பவில்லை என்று கருத்துத் தெரிவித்தனர்.
மேலும் கட்சி விவகாரங்களில் தொடர்ந்து இந்த இருவரும் மோதி வருவதும், வெளிப்படையாகவே ஒருவரைஒருவர் தாக்கிக் கொள்வதும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை எரிச்சலூட்டியுள்ளது.
இதையடுத்து கட்சித் தலைமையில் மாற்றம் கொண்டு வர காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதற்காக காங்கிரஸ்ஜனநாயகப் பேரவையின் தலைவர் ப.சிதம்பரத்தை கட்சிக்குள் இழுத்து தலைமைப் பதவி தரவும் சோனியா முன்வந்தார். ஆனால், பா.சி. அதைத் தட்டிக் கழித்து வருகிறார்.
இதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவைச் சமாளிக்கும் வகையில் காங்கிரஸ் பெண் தலைவர்களில்முக்கியமானவரான ஜெயந்தி நடராஜனை தலைவராக்கலாமா என்றும் சோனியா யோசித்து வருவதாகத்தெரிகிறது.
யாரை நியமிப்பது என்பதில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. ஆனால், சோ.பாவை நீக்குவது என்றமுடிவுக்கு காங்கிரஸ் கட்சித் தலைமை வந்துவிட்டதாகத் தெரிகிறது.
கட்சிக்கு மீண்டும் உயிர் கொடுத்தவர், பரபரப்பு அரசியல் நடத்தி வருபவர் என்பதால் செயல் தலைவர்இளங்கோவனை பதவியில் வைத்திருக்கவும் சோனியா முடிவு செய்துள்ளார்.
ஆனால், மிக நிதானமாகப் பேசும் சோ.பாலகிருஷ்ணனுக்கு கட்சியிலும் ஆதரவில்லை. பரபரப்பு எதையும்உருவாக்கவும் அவருக்குத் திறமையில்லை என்பது தான் அவரை நீக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதற்குக்காரணமாகும்.
சோ.பா. நீக்கத்தை எப்படியாவது தடுக்கும் முயற்சிகளில் காங்கிரஸ் அகில இந்தியச் செயலாளர்களில் ஒருவரானவாசன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஆனாலும் சோ.பா. நீக்கம் உறுதி என்றே தெரிகிறது.
புதிய தலைவரை இறுதி செய்துவிட்டு கமல்நாத் அடுத்த வாரத்தில் தமிழகம் வர உள்ளார். அடுத்த வாரத்தில்காங்கிரஸ் கட்சியில் பல பரபரப்புகள் காத்திருக்கின்றன.