மின்சாரம் இல்லாமல் திண்டாடிய உயர் நீதிமன்றம்!
சென்னை:
கோடை விடுமுறைக்குப் பின்னர் இன்று முதல் இயங்கத் தொடங்கிய சென்னை உயர்நீதிமன்றம் சுமார்2 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் தவித்தது. கோர்ட் அறைகள் இருளில் மூழ்கின.
சென்னை உயர்நீதிமன்றம், கோடை கால விடுமுறக்குப் பின்னர் இன்று காலை முதல் அளவில்செயல்படத் தொடங்கியது. காலையில் நீதிமன்றம் திறக்கப்பட்டபோது அங்கு மின் வினியோகம்இல்லை. நீதிமன்ற அறைகள் அனைத்தும் இருளில் மூழ்கியிருந்தன.
மின்சாரம் வந்து விடும் என்ற நம்பிக்கையில் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி தலைமையிலானமுதலாவது பெஞ்ச் தனது விசாரணையை, எமர்ஜென்சி விளக்கை வைத்துக் கொண்டு தொடங்கியது.
ஆனால் சுமார் 2 மணி நேரமாகியும் மின்சாரம் வரவில்லை. இதையடுத்து கோபமடைந்த தலைமைநீதிபதி சுபாஷன் ரெட்டி, மின்வாரிய வழக்கறிஞரை தனது அறைக்கு வரவழைத்தார்.
நீதிமன்றம், மருத்துவமனை போன்றவை எவ்வளவு முக்கியமானவை, அங்கு இப்படியாமணிக்கணக்கில் மின் வினியோகத்தை துண்டிப்பீர்கள் என்று தனது அதிருப்தியை வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து அங்கிருந்து வியர்க்க விறுவிறுக்க ஓடிய வழக்கறிஞர் மின்வாரியஅதிகாரிகளைத் தொடர்பு கொண்டு டோஸ் விட, உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு மின்வினியோகம் சரி செய்யப்பட்டது.
உயர்நீதிமன்றம் இன்று முதல் திறக்கப்படுகிறது என்பது மின் வாரிய அதிகாரிகளுக்கு சரியாகதெரியாத காரணத்தால், மின்வினியோகம் கொடுக்கப்படாமல் இருந்ததாக விளக்கம்தரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications