மின்சாரம் இல்லாமல் திண்டாடிய உயர் நீதிமன்றம்!
சென்னை:
கோடை விடுமுறைக்குப் பின்னர் இன்று முதல் இயங்கத் தொடங்கிய சென்னை உயர்நீதிமன்றம் சுமார்2 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் தவித்தது. கோர்ட் அறைகள் இருளில் மூழ்கின.
சென்னை உயர்நீதிமன்றம், கோடை கால விடுமுறக்குப் பின்னர் இன்று காலை முதல் அளவில்செயல்படத் தொடங்கியது. காலையில் நீதிமன்றம் திறக்கப்பட்டபோது அங்கு மின் வினியோகம்இல்லை. நீதிமன்ற அறைகள் அனைத்தும் இருளில் மூழ்கியிருந்தன.
மின்சாரம் வந்து விடும் என்ற நம்பிக்கையில் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி தலைமையிலானமுதலாவது பெஞ்ச் தனது விசாரணையை, எமர்ஜென்சி விளக்கை வைத்துக் கொண்டு தொடங்கியது.
ஆனால் சுமார் 2 மணி நேரமாகியும் மின்சாரம் வரவில்லை. இதையடுத்து கோபமடைந்த தலைமைநீதிபதி சுபாஷன் ரெட்டி, மின்வாரிய வழக்கறிஞரை தனது அறைக்கு வரவழைத்தார்.
நீதிமன்றம், மருத்துவமனை போன்றவை எவ்வளவு முக்கியமானவை, அங்கு இப்படியாமணிக்கணக்கில் மின் வினியோகத்தை துண்டிப்பீர்கள் என்று தனது அதிருப்தியை வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து அங்கிருந்து வியர்க்க விறுவிறுக்க ஓடிய வழக்கறிஞர் மின்வாரியஅதிகாரிகளைத் தொடர்பு கொண்டு டோஸ் விட, உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு மின்வினியோகம் சரி செய்யப்பட்டது.
உயர்நீதிமன்றம் இன்று முதல் திறக்கப்படுகிறது என்பது மின் வாரிய அதிகாரிகளுக்கு சரியாகதெரியாத காரணத்தால், மின்வினியோகம் கொடுக்கப்படாமல் இருந்ததாக விளக்கம்தரப்பட்டுள்ளது.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications