டெல்லி, சென்னையில் மாறனுக்கு தவறான சிகிச்சை
சென்னை:
மத்திய அமைச்சர் முரசொலி மாறன் தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதாகவும், அவருக்கு டெல்லி மற்றும்சென்னையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அது குறித்து விசாரணைக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும்என்றும் திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், முரசொலி மாறன் தொடர்ந்து சீரியஸ் நிலையில்தான்இருக்கிறார். உடல் நிலை சில நேரம் சரியாகிறது, ஆனால், மீண்டும் சீரியஸாகிவிடுகிறது.
அவருக்கு டெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட சிகிச்சை முதல்சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட சிகிச்சை வரை விசாரணை நடத்த வேண்டும் என்றுகோரி பிரதமர் வாஜ்பாய்க்கு கடிதம் எழுதவுள்ளேன்.
சென்னை ஆடிட்டர் கிருஷ்ணமூர்த்திக்கும், ஜெயலலிதாவுக்கும் தொடர்பு உள்ளதாக நான் கூறியிருப்பது குறித்துமான நஷ்ட வழக்குப் போடப் போவதாக ஜெயலலிதா கூறியுள்ளார். ஆடிட்டர் கிருஷ்ணமூர்த்தி குறித்து நான்அப்போது கூறியதையே இப்போதும் கூற விரும்புகிறேன். வழக்குப் போட்டால் போடட்டும், அதை சந்திக்க நான்தயார் என்றார்.
சென்னை, டெல்லி மருத்துவமனைகளில் மாறனுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதா என்பது குறித்துவிசாரணை நடத்த வேண்டும் என்ற கருணாநிதியின் கோரிக்கைக்கு தமிழக பா.ஜ.க. ஆதரவு தெரிவித்துள்ளது.பா.ஜ.க. மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், கருணாநிதி சொல்வது மாதிரி விசாரணை நடத்துவதுநல்லது தான் என்றார்.