சென்னையில் போர் பயிற்சி விமானம் விழுந்தது: 2 விமானிகள் உயிர் ஊசல்
சென்னை:
சென்னை அருகே போர்ப் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் இரு விமானிகள் படுகாயங்களுடன்உயிர்த் தப்பியுள்ளனர். அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
சென்யைை அடுத்த துரைப்பாக்கம் பகுதியில் இந்த விபத்து நடந்தது. தாம்பரம் விமான தளத்தில் இந்த போர்ப்பயிற்சி விமானத்தில் (HPT trainer aircraft) ஸ்கூவாட்ரன் லீடர் வைத் மற்றும் இன்னொரு ஸ்கூவட்ரன் லீடர்நந்தேகர் ஆகிய இரு விமானப் படை அதிகாரிகளும் இன்று காலை பயிற்சிக்காகக் கிளம்பினர்.
சென்னையில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள துரைப்பாக்கம் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது அந்தவிமானம் திடீரென தரையை நோக்கிப் பாய்ந்தது. இங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் அருகே உள்ளகாய்ந்து கிடக்கும் ஒரு குளத்தில் மோதி வெடித்துச் சிதறியது.
இதில் இந்த இரு விமானிகளும் படுகாயமடைந்தனர். பயங்கர சப்தம் கேட்டு கல்லூரி மாணவர்கள் ஓடி வந்தனர்.இந் நிலையில் தகவல் அறிந்து விமானப் படையின் ஹெலிகாப்டரும் தாம்பரம் விமானப் படைத் தளத்தில் இருந்துஉடனடியாக அங்கு விரைந்தது.
படுகாயத்துடன் கிடந்த இருவரையும் ஹெலிகாப்டர் மீட்டுச் சென்றது. அவர்கள் தாம்பரம் விமானப் படைமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன் தாம்பரம் விமான தளத்தில் இருந்து கிளம்பிய கிளைடர் விமானம் விழுந்து என்.சி.சி.மாணவியும் பயிற்சியாளரும் பலியானது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications