For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக பள்ளிகளில் இந்தி போதிக்க சொல்கிறது பா.ஜ.க

By Staff
Google Oneindia Tamil News

கடலூர்:

தமிழ் நாட்டுப் பள்ளிகளில் இந்தி மொழியை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க. கோரிக்கைவிடுத்துள்ளது.

மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடலூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இந்தி மொழியறிவு இல்லாத காரணத்தால் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு, தேசிய அளவில் வேலை வாய்ப்பு,கல்வி கிடைப்பது மிகவும் கஷ்டமாக உள்ளது.

இந்தி மொழியை திராவிடக் கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வருவதால், தமிழர்களுக்குத்தான் அதிக பாதிப்புஏற்பட்டுள்ளது. வட இந்தியாவுக்கு வேலை தேடிச் செல்லும் தமிழர்கள் மொழியறிவு இல்லாத காரணத்தால் மிகவும்தடுமாறுகிறார்கள். வடக்கே தமிழர்களுக்கு நல்ல வேலை கிடைப்பது அரிதாகி விட்டது.

இந்தி கற்றிருந்தால் அவர் அறிவாளி என்று கூறி விட முடியாதுதான். ஆனால் இந்தி தெரியாவிட்டால் ஏற்படும்பாதிப்பு தமிழ்நாட்டுக்குத்தான் என்பதை மறந்து விடக் கூடாது.

இந்தி மொழியைக் கற்பதால் ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் அவர்களது உள்ளூர்மொழிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

அதேபோல, இந்தியை எதிர்த்து வருவதால், தமிழ் மொழி வளர்ச்சி அடைந்துள்ளதா என்பதையும் ஆய்வு செய்துபார்க்க வேண்டும்.

ஆங்கிலத்தை சர்வதேசத் தொடர்பு மொழியாக ஏற்றுக் கொண்டிருப்பதைப் போல, இந்தியை, இந்தியாவின்தொடர்பு மொழியாக ஏற்க வேண்டும். இதில் தயக்கம் காட்டினால் தமிழ்நாடு மேலும் தனிமைப்படுத்தப்படும்அபாயம் உள்ளது என்றார்.

தமிழ் மொழிக்கு செம்மொழி (classical language) அந்தஸ்து பெற தமிழகம் கடந்த 50 ஆண்டுகளாக மத்தியஅரசிடம் போராடி வருகிறது. சமஸ்கிருதத்துக்கு செம்மொழி அந்தஸ்து தந்துளள மத்திய அரசு, அதற்குஇணையான பழமையும் செழுமையும் கொண்ட தமிழைக் கண்டுகொள்ளவில்லை.

இந்தி விஷயத்தில் தங்களது கருத்தைத் தெரிவித்துள்ள பொன்.ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் தமிழுக்குஇந்தியாவில் உரிய அந்தஸ்து கிடைக்கச் செய்யவும் குரல் கொடுப்பார்களா?

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X