இளங்கோவனை கைது செய்ய வேண்டியதுதானே?: ஜெவுக்கு கருணாநிதி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

எதற்கெடுத்தாலும் கைது, வழக்கு என்று பறக்கும் இந்த அரசு, ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளுக்கு அனுமதிகொடுப்பதில் நடந்த ஊழலை வெளிக் கொணர்ந்துள்ள காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் மீதுநடவடிக்கை எடுக்காதது ஏன் என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் முரசொலி பத்திரிக்கையில் கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்துள்ள பதிலில்,

கடந்த 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில், முறைகேடான வகையில்ஏராளமான ஆசியர் பயிற்சிப் பள்ளிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டதை உயர்நீதிமன்றமே கண்டித்துள்ளது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் அனுமதி கொடுக்கப்பட்ட ஆசியர் பயிற்சிப் பள்ளிகளில் பயின்ற ஆயிரக்கணக்கானமாணவ, மாணவியர் இன்னும் கூட நீதி கிடைக்காமல் தவித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.

இந் நிலையில் மீண்டும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளுக்கு அனுமதி கொடுப்பதில் லட்சம், லட்சமாய் லஞ்சம்வாங்கப்படுவதாக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கூறிய புகாருக்கு மறுப்பு கூறாமல் மெளனம்சாதிப்பது ஏன்?

எதற்கெடுத்தாலும் வழக்கு, சிறை என்று ஆளாய்ப் பறக்கும் அதிமுக ஆட்சியாளர்கள் அவர் மீது நடவடிக்கைஎடுக்க வேண்டியதுதானே? கைது செய்ய வேண்டியதுதானே. அவர் மீது மான நஷ்ட வழக்குப் போட வேண்டியதுதானே?

அவர்கள் பக்கம் நியாயம் இருந்தால் இளங்கோவன் மீது வழக்கு தொடரலாமே. உண்மைகள் வெளிவந்து இந்தஊழல் ராமயணத்துக்கு ரகுபதி ராகவ ராஜாராம் பாடிக் கூட முடித்துவிடலாம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+