கொலையாளிகளுக்கு பண உதவி?: முன்னாள் மதுரை மேயரிடம் விசாரணை
மதுரை:
தா.கிருட்டிணன் கொலையாளிகளுக்கு மதுரை முன்னாள் மேயரும் அழகிரி ஆதரவாளரும்குழந்தைவேலு பண உதவி செய்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அவரிடம் கடந்த இரண்டு நாட்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
நேற்று அவர் மதுரை செல்லூர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு சுமார் 10 மணி நேரம் தொடர்ந்துவிசாரிக்கப்பட்டார்.
தா.கிருட்டிணன் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள கொலையாளிகளுக்கு பண உதவி செய்தீர்களா,அவர்களுக்கும் உங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது குறித்து அவரிடம் போலீசார் துருவிஎடுத்தனர்.
மேலும், தா.கிருட்டிணனின் தம்பி ராமையாவுக்கு கொலை மிரட்டல் வந்தது தொடர்பாகவும்குழந்தைவேலுவிடம் விசாரிக்கப்பட்டது.
இரவில் குழந்தைவேலு காவல் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால்,தேவைப்படும்போதெல்லாம் காவல் நிலையத்துக்கு வர வேண்டும் என அவருக்கு போலீஸார்உத்தரவிட்டுள்ளனர்.
விரைவில் குழந்தைவேலு கைதாவார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications