காற்றில்லா டயர்களுடன் தரையிறங்கிய ஜெர்மன் விமானம்!
சென்னை:
காற்றழுத்தம் மிகக் குறைவாக இருந்த டயர்களுடன், சென்னைக்கு வந்த விமானம் பெரும் பரபரப்புக்கிடையேபத்திரமாக தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
பிராங்க்பர்ட் நகலிருந்து சென்னைக்கு லூப்தன்சா விமானம் நேற்று இரவு வந்தது. இரவு 11.45 மணிக்கு வரவேண்டிய விமானம், 11 மணிக்கே விமான நிலையத்தை அடைந்து விட்டது. இதைத் தொடர்ந்து தரைஇறங்குவதற்கான அனுமதிக்காக விமானம் வானில் சுற்றிக் கொண்டிருந்தது.
அப்போதுதான், விமானத்தின் டயர்களில் காற்றழுத்தம் மிகவும் குறைவாக இருப்பது விமானிகளுக்குத்தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக தரைக் கட்டுப்பாட்டு நிலையத்திற்குத் தகவல் தந்தனர் விமானிகள்.
உடனடியாக அவசரகால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தீயணைப்பு வண்டிகள் ரன்வேயை ஒட்டிநிறுத்தப்பட்டன. விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எமெர்ஜென்சி லேண்டிங்குக்கான அனைத்துமுன்னெச்சரிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டன.
இதைத் தொடர்ந்து விமானம் தரையிறக்கப்பட்டது. விமானிகளின் சாதுரியத்தால் விமானம் பத்திரமாகதரையிறங்கியது. அதன் பிறகுதான் விமான நிலைய அதிகாகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
டயர்களில் காற்றழுத்தம் குறைவாக உள்ள நிலையில் விமானத்தை தரையிறக்குவது மிகக் கடினமான,அபாயகரமான செயல் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த விமானத்தில் 325 பயணிகள் இருந்தனர்.