மாறனுக்கு பெங்களூரில் சிகிச்சை தர மத்திய அரசு திட்டம்
சென்னை:
அரிெக்காவில் ஹூஸ்டன் நகரில் மெதாடிஸ்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் முரசொலிமாறனுக்கு இதுவரை மத்திய அரசு ரூ. 10 கோடி செலவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இருப்பினும் அவரது உடல் நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதும் இல்லாததால் அவரை மீண்டும் இந்தியாகொண்டு வந்துவிடுவது குறித்து அவரது குடும்பத்தினருடன் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இந்தியாவில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கும் ரூ. 2.25 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது. இந்தச்செலவுகள் குறித்து அதிமுக எம்.பிக்கள் மக்களைவையில் கேள்வி எழுப்பியதையடுத்து செலவாகும் பணத்தைத்தந்துவிடுவதாக மத்திய அரசிடம் மாறனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் சிகிச்சைக்கு ஒரு நாளைக்கு மாறனுக்கு ரூ. 4 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரைசெலவிடப்படுவதாகத் தெரிகிறது.
இந் நிலையில் அவரை இந்தியா கொண்டு வந்துவிடலாம் என மத்திய அரசு யோசிக்கிறது.
ஆனால், டெல்லியிலும் சென்னையிலும் தரப்பட்ட சிகிச்சைகள் தவறானவை என்று திமுக தலைவர் கருணாநிதிகுற்றம் சாட்டி பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளதால் பெங்களூரில் உள்ள மல்லையா, மணிப்பால் ஆகியமருத்துவமனைகளில் ஏதாவது ஒன்றில் வைத்து சிகிச்சை அளிக்கலாமா என்று மாறனின் குடும்பத்தினருடன்நலத்துறை இணையமைச்சர் ராஜா மூலம் மத்திய அரசு பேசி வருகிறது.












Click it and Unblock the Notifications