மாணவன் தற்கொலை: பள்ளி நிர்வாகியிடம் மனித உரிமை கமிஷன் விசாரணை
சென்னை:
சென்னை வேலம்மாள் பள்ளி மாணவன் ராம் அபினவ் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாகஅவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், மாநில மனித உரிமை கமிஷன் உறுப்பினர்கள்பள்ளித் தாளாளரிடம் விசாரணை நடத்தினர்.
சென்னை மேற்கு முகப்பேர் பகுதியில் வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. இங்கு 10வதுபடித்து வந்த மாணவன் ராம் அபினவ், சில தினங்களுக்கு முன் தனது 16-வது பிறந்த நாளைகொண்டாடினான் ராம் அபினவ்.
இதனால் அன்று நடந்த சிறப்பு வகுப்புக்கு அவன் போகவில்லை. அடுத்த நாள் பள்ளிக்குச்சென்றபோது சிறப்பு வகுப்புக்கு ஏன் வரவில்லை என்று கூறி ஆசியர்கள் திட்டி அடித்து,உதைத்தனர்.
ஆசியர்கள் கடுமையாக தண்டித்ததால் மனம் உடைந்த மாணவன் அபினவ், திருமங்கலத்தில் உள்ளதனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டான்.
இதையடுத்து ராம் அபினவை மிகக் கடுமையாகத் தண்டித்ததாகக் கூறப்படும் கணித ஆசிரியர்கண்ணப்பன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் மீது குற்றம்சாட்டிராமின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள், மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் நீதிபதிசம்பந்தத்திடம் மனு கொடுத்தனர்.
இதன் பேரில் ஆணைய உறுப்பினர் கமால் பாட்சா தலைைமயிலான குழு பள்ளி தாளாளர்முத்துராமலிங்கத்திடம் விசாரணை நடத்தியது.
விசாரணை அறிக்கை நீதிபதி சம்பந்தத்திடம் வழங்கப்பட்ட பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைஎடுக்கப்படும் என்று கமால் பாட்சா தெரிவித்தார்.
முன்னதாக காமல் பாட்ஷ தலைமையிலான விசாரணைக் குழு பள்ளிக்கு சென்றபோது அங்கு கூடியநிருபர்களுடன் பள்ளி நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் தகராறில் ஈடுபட்டனர்.