ஏட்டையா வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீஸ் ரெய்டு
சென்னை:
திருச்சியைச் சேர்ந்த ஏட்டைய்யாவின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது அவர் ரூ.15 லட்சம் அளவுக்கு சொத்து குவித்திருப்பது தெரியவந்தது.
திருச்சி மாவட்டம் லால்குடி போலீஸ் ஸ்டேஷனில் தலைமைக் காவலாரக பணியாற்றுபவர் விசுவம். இவர் மீதுஅசோக்குமார் என்பவர் ஊழல் தடுப்புத் துறையில் புகார் செய்தார். எனது வேன் டிரைவரை ஜாமீனில் விடுவிக்கவிசுவம் ரூ. 1,000 லஞ்சம் கேட்டார்.
அத்தொகையை காவல் நிலையத்தின் அருகே உள்ள டீக்கடை உரிமையாளர் ஜிலானியிடம் கொடுக்கும்படிகூறினார் என்று லஞ்ச ஒழிப்புப் போலீசாரிடம் தெரிவித்தார் அசோக் குமார்.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புப் போலீசாரே ரூ. 1,000த்தை அசோக்குமாரிடம் கொடுத்து அதை ஜிலானியிடம் தரச்செய்தனர். அதை ஜீலானி வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரைக் கைது செய்தனர்.
ஜிலானி கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் தலைமைக் காவலர் விசுவமும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து விசுவத்தின் வீட்டை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனையிட்டனர். அப்போது ரூ. 8.50லட்சம் மதிப்புகு அவர் வங்கிகளிலும் ஷேர்களிலும் முதலீடு செய்திருப்பதும், அவரிடம் மாருதி கார், 2 மோட்டார்சைக்கிள்கள் இருப்பதும் தெரியவந்தது.
இவரது மாத வருமானம் ரூ. 7,000த்தைக் கூட தாண்டாது என்பது குறிப்பிடத்தக்கது. ஏட்டையா சைடில் கையைநீட்டியே இவ்வளவு பணம் பார்த்துள்ளார்.












Click it and Unblock the Notifications