அதிமுகவினரை ஏமாற்றி ரூ. 34 லட்சம் மோசடி: தம்பதி தலைமறைவு

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை:

முதல்வர் ஜெயலலிதாவின் கலாச்சாரச் செயலாளர் என்று கூறிக் கொண்டு அதிமுகவினரிடம் ரூ. 34 லட்சத்தைசுருட்டிக் கொண்டு கம்பி நீட்டிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் சிவகங்கையைச் சேர்ந்த அதிமுகவினர் 56 பேரிடம் இவ்வாறுமோசடி செய்துள்ளார். அதிமுகவினர் தவிர வேறு யாரையும் இவர் ஏமாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் விவரம்:

தன்னை ஜெயலலிதாவின் கலாச்சாரச் செயலாளர் என்று கூறி அதிமுகவினரிடம் நெருங்கினார் பாலகிருஷ்ணன்.2001ம் ஆண்டு முதலே போயஸ் தோட்டத்துக்கு மிக நெருக்கமானவராக இருப்பதாகக் கூறி ஜெயலலிதாவிடம்எடுத்த சில போட்டோக்களையும் காட்டியுள்ளார்.

இதில் அசந்து போன அதிமுகவினரை கட்சியில் பதவிகளைப் பிடிக்க இவரிடம் நெருங்கியுள்ளனர். அப்போதுஅவர்களிடம் நம்ம ஆட்சியில நீங்க ஏன் கஷ்டப்படனும், பேசாமா அரசு உத்தியோகத்துல சேர வேண்டியதுதானே என்று கூறியுள்ளார்.

அது முடியுமா என்று கேட்ட அதிமுகவினரிடம் மின் துறை, வீட்டு வசதித்துறை, சுற்றுலா வளர்ச்சித்துறை,தொழில்துறை முதலீட்டுக் கழகம் இதுல எல்லாம் நான் உங்களுக்கு வேலை வாங்கித் தர்றேன். ஆனா, கொஞ்சம்செலவாகும் என்று கூறியுள்ளார்.

அரசு வேலை கிடைக்கும் என்று நம்பிய அந்த அதிமுக தொண்டர்கள், இவரிடம் ரூ. 50,000 முதல் ரூ. 1 லட்சம்வரை பணத்தைக் கொடுத்துள்ளனர். மொத்தம் ரூ. 33.5 லட்சம் வரை அதிமுகவினரிடம் இவர் வசூலித்தார்.

பணம் கொடுத்து பல மாதங்கள் ஆகியும் யாருக்கும் வேலை கிடைக்காததால் சந்தேகப்பட்ட அதிமுகவினர்பாலகிருஷ்ணனைத் தேட அவர் தனது மனைவியுடன் தலைமறைவாகிவிட்டார்.

இதையடுத்து காவல் நிலையத்தில் அதிமுகவினர் புகார் தந்துள்ளனர். போலீசார் பாலகிருஷ்ணன், அவரது மனைவிஉள்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாலகிருணனையும் அவரது மனைவியையும் தேட சிறப்புப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+