இந்தியாவின் கிழக்கு வாயிலாக சென்னையை மாற்றுவோம்: ஜெயலலிதா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையை இந்தியாவின் கிழக்கு நுழைவாயிலாக மாற்றிக் காட்டுவோம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சென்னை அருங்காட்சியகத்தின் 150வது ஆண்டு விழாவில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமைத் தொடர்ந்துபேசிய ஜெயலலிதா கூறியதாவது:
தமிழகத்தை முன்னிலைக்குக் கொண்டு வரும் அனைத்து முயற்சிகளையும் எங்கள் அரசு செய்யும். செனனையைகலாச்சார, தொழில்நுட்பரீதியில் வளர்ச்சியடைந்த நகரமாக மாற்றி, அதை வெளியுலகுக்கு இந்தியாவின் கிழக்குநுழைவாயிலாக மாற்றிக் காட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
சென்னையில் உள்ள தேசிய கலாச்சார மையத்தை ரூ. 6 கோடி செலவில் புதுப்பிக்க மத்திய அரசிடம் அனுமதிகேட்க உள்ளோம் என்றார் ஜெயலலிதா.
பின்னர் இந்த அருங்காட்சியகம் குறித்த விசிடிக்கழையும் புத்தகங்களையும் ஜெயலலிதா வெளியிட்டார்.












Click it and Unblock the Notifications