For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நர்ஸ் சித்ரா சீரியஸ்: போலீஸ் மீது மனித உரிமை ஆணையத்தில் தாய் புகார்

By Super
Google Oneindia Tamil News

சென்னை:

செக்ஸ் டாக்டர் பிரகாஷ் வழக்கில் முக்கிய சாட்சியான நர்ஸ் சித்ரா, உயிருக்குப் போராடி வருவதாகக்கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன் அவர் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்துடன் தூக்க மாத்திரை சாப்பிட்டார். மயக்கநிலையில் சிகிச்சை பெற்று வரும் அவரது நிலை தேறவில்லை. அவர் உயிருக்குப் போராடி வருவதாகத் தெரிகிறது.

இதையடுத்து போலீஸாரின் கொடுமை காரணமாகவே தனது மகள் இந்த தற்கொலை முடிவை எடுத்தார் என்று கூறிஅவரது தாயார் மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இன்டர்நெட்டில் செக்ஸ் வீடியோ, மற்றும் ஸ்டில் போட்டோக்களை விற்று வந்த செக்ஸ் டாக்டர் பிரகாஷிடம்நர்ஸாக வேலைபார்த்தவர் சித்ரா. பிரகாஷ் ஆபாசப் படங்களை எடுத்தபோது அதில் சித்ராவும் நடித்தார். பிறபெண்களையும் ஆண்களையும் நடிக்க வைத்தார். படமெடுக்க சித்ராவும் உதவியதாக அவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

பிரகாஷ் சிறையில் உள்ள நிலையில் சித்ரா ஜாமீனில் வெளியே வந்தார்.

இந் நிலையில் சில நாட்களுக்கு முன் சித்ராவின் தம்பி ஒரு கொலை வழக்கில் கைதாவிட, சித்ராவும் அவரது தம்பிமனைவி ஆஷாவும் (இருவரும் பிரகாஷ் வழக்கில் முக்கிய சாட்சிகள் ஆவார்) தூக்க மாத்திரை சாப்பிட்டனர்.ஆபத்தான நிலையில் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந் நிலையில் சித்ராவின் உடல் சீரியஸாகி உள்ளதாகத் தெரிகிறது.

இந் நிலையில் போலீஸார் மீது நர்ஸ் சித்ராவின் தாயார் மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

தனது மனுவில், போலீஸார் விசாரணை என்ற பெயரில் அடிக்கடி வீட்டுக்கு வந்து தொல்லை கொடுத்தனர்.இரவிலும் அவர்கள் வந்து விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்றனர். அத்தோடு பலறை சீருடைஇல்லாமல் சிலர் வந்து நாங்கள் போலீஸார் என்று கூறி விசாரணை நடத்தினர்.

இதனால் மன உளைச்சல் அடைந்த எனது மகள் தற்கொலைக்கு முயற்சி செய்தாள். எனவே போலீஸார் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X