2 பொறியியல் கல்லூகளின் அங்கீகாரம் ரத்து
சென்னை:
தமிழகத்தில் 2 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக்கழக ரத்து செய்துள்ளது.
இந்தக் கல்லூரிகளில் சிங்கிள் விண்டோ முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட மாட்டாது என்றும் அண்ணாபல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மாத்தூரில் உள்ள சக்தி பொறியியல் கல்லூரி மற்றும் சென்னை கோயம்பேடு ஜே.ஏ.பொறியியல் கல்லூ ஆகியவை அங்கீகாரம் இழந்த கல்லூரிகளாகும்.
இந்த முடிவை அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் எடுத்துள்ளது. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இல்லாதகாரணத்தால் இந்தக் கல்லூகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கல்லூகளில் முறையான ஆய்வக வசதிகள், வகுப்பறைகள் ஆகியவை இல்லை. மின் விசிறிகள் கூடஇல்லாமல் பல வகுப்பறைகள் உள்ளன. இதில் ஜே.ஏ. பொறியியல் கல்லூரி வாடகைக் கட்டடத்தில் இயஙகுகிறது.
இரு கல்லூகளின் அங்கீகாரத்தையும் ரத்து செய்யுமாறு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலுக்கும் பரிந்துரைசெய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications