10 மணி முதல் 5.45 வரை அலுவலகத்தில் இருக்க வேண்டும்: ஊழியர்களுக்கு அரசு உத்தரவு
சென்னை:
ஜூலை 2ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அரசு ஊழியர்கள், ஆசியர்கள் அறிவித்துள்ளநிலையில், தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதை மீறும் அரசு ஊழியர்கள், ஆசியர்கள் மீதுகடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது எச்ரிசத்துள்ளது.
இதுதொடர்பாக அனைத்துத் துறை உயர் அதிகாரிகளுக்கும் அரசு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில்அரசு ஊழியர்களும், ஆசியர்களும் கடைப்பிடிக் வேண்டிய பலவேறு கட்டுப்பாடுள் குறித்து கூறப்பட்டுள்ளது.
அதன்படி காலை10 மணிக்கே அனைவரும் வேலைக்கு வந்து விட வேண்டும், மாலை 5.45 மணிக்குத்தான் வீடுதிரும்ப வேண்டும். இடைப்பட்ட நேரத்தில், மதிய உணவு இடைவேளையின்போதுதான் வெளியே செல்லவேண்டும்.
மற்ற நேரங்களில் செல்வதாக இருந்தால் துறை அதிகாரியின் அனுமதியுடன்தான் செல்ல வேண்டும்.
அலுவலக நேரத்திலோ அல்லது உணவு இடைவேளையின்போதோ அலுவலக வாயிலில் நின்று அரசுக்கு எதிராககோஷமிடுவது, கூட்டம் போடுவது போன்றவற்றில் ஊழியர்கள் ஈடுபடக் கூடாது.
இந்தக் கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது நடத்தை விதி எண் 22ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசுஎச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications