அயோத்தி: சங்கராச்சாரியாருடன் ஜஸ்வந்த், பெர்னாண்டஸ் இன்று சந்திப்பு
சென்னை:
அயோத்திப் பிரச்சினை தொடர்பாக காஞ்சி சங்கராச்சாயாருடன் ஆலோசனை நடத்த மத்திய நிதியமைச்சர்ஜஸ்வந்த் சிங், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோர் இன்று காஞ்சிபுரம் வருகின்றனர்.
அயோத்திப் பிரச்சினைக்குப் புதிய தீர்வுத் திட்டம் ஒன்றை இஸ்லாமிய சட்ட வாரியத்திற்கு காஞ்சிசங்கராச்சாரியார் ஜெயேந்திரர் அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக சட்ட வாரியம் விவாதித்து சிலயோசனைகளைத் தெரிவித்துள்ளது.
அது குறித்து மத்திய அரசுடன் பேச சங்கராச்சாரியார் ஆர்வம் தெரிவித்தார். இதையடுத்து சங்கராச்சாரியாருடன்தனது சார்பில் விவாதிக்க பிரதமர் வாஜ்லபாய் இந்த இரு மத்திய அமைச்சர்களையும் அனுப்பி வைத்துள்ளார்.
இன்று சிறப்பு விமானத்தில் சென்னை வரும் இருவரும் ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் செல்கின்றனர்.
காஞ்சி மடத்திற்குச் சென்று ஜெயேந்திரரைச் சந்தித்து புதிய திட்டம் குறித்துப் பேசுகிறார்கள். பின்னர் இன்று மாலைஇருவரும் டெல்லி திரும்பி பிரதமரைச் சந்திக்கின்றனர்.
அயோத்தி விவகாரம் பெரிய அளவில் வெடித்த போதெல்லாம் சங்கராச்சாரியாரை பெர்னாண்டஸ் பலமுறைசந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.