காங்கிரசுக்குள் கலகம் மூட்டுகிறது அதிமுக: இளங்கோவன் புகார்
சென்னை:
சோ.பாலகிருஷ்ணனையும், என்னையும் பிரிக்க அதிமுக தூண்டுதலின்பேரில் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே சிலசக்திகள் சதி செய்து வருவதாக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சோ.பாவுக்கும் எனக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை.அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரை நாங்கள் தான் தலைவர்களாக நீடிப்போம்.
எனக்கும், சோ.பாவுக்கும் இடையே சண்டை என்று மேலிடத்தில் சொல்லியது இங்குள்ள சில காங்கிரஸ்தலைவர்கள்தான். அதிமுகவின் தூண்டுதலின்பேரில்தான் இவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
இந்த அதிமுக கைத்தடிகள் குறித்து கட்சி மேலிடத்தில் கூறியுள்ளோம். அவர்கள் மீது மேலிடம் உரிய நடவடிக்கைஎடுக்கும்.
ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மீது வருமான வரி ஏய்ப்பு, வருவாய்க்கு மிஞ்சிய சொத்து சேர்த்தது,பொருளாதாரக் குற்றம் என மொத்தம் 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால், பொருளாதாரக் குற்றம் ஏதும்தன் மீது இல்லை என ஜெயலலிதா ஊரை ஏமாற்ற முயல்கிறார்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு 43 ஆசியர் பயிற்சிப் பள்ளிகளுக்கு லஞ்சம் வாங்கிக் கொண்டுஅனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் செம்மலை இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.இல்லாவிட்டால் அவர் மீது வழக்குத் தொடர்வேன்.
தமிழகத்தில் திமுக தான், கூட்டணிக்கு உகந்த கட்சி என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பீட்டர் அல்போன்ஸ்கூறியுள்ளார். அந்தக் கருத்தை மறுப்பதற்கில்லை என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications