தென் மாவட்டங்களில் கன மழை
நாகர்கோவில்:
தென் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கன மழை பெய்து வருகிறது.
தென் மேற்கு பருவ மழை வலுத்து வருகிறது. இதையடுத்து, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்களானகன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து 3-வது நாளாக நல்ல மழை பெய்து வருகிறது.
குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது. நாகர்கோவில், பூதப்பாண்டி உள்படமாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. கடும் மழை காரணமாக பெருஞ்சானிமற்றும் பேச்சிப்பாறை அணைகளில் கணிசமான அளவுக்கு நீர் நிரம்பியுள்ளது.
இதனால், நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சாரல் மழை வலுத்துள்ளது. மேலும் அருவிகளிலும் நீர் கொட்டுவதுஅதிகரித்துள்ளது. இது தவிர மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்துஅதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர கோவை, விருதுநகர்,தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. கோவைமாவட்டம் பொள்ளாச்சியில் 25 சென்டி மீட்டர் மழை பதிவானது. வால்பாறை, சிறுவாணி ஆகிய பகுதிகளிலும்நல்ல மழை பெய்து வருகிறது.
ஈரோடு மாவட்டம் பவானி சாகலிலும் நல்ல மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர், கூடலூர், ஊட்டிஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது.