மத்திய அமைச்சர் முன் திமுகவினர் கட்டிப்புரண்டு சண்டை
அரியலூர்:
அரியலூர் அருகே செந்துறை என்ற இடத்தில் நடந்த திமுக ஆலோசனைக் கூட்டத்தின்போது, இருகோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் வன்முறையாக வெடித்தது. மத்திய அமைச்சர் ராஜாமுன்னிலையில் திமுகவினர் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர்.
பலர் மண்டை உடைந்து ரத்தம் சொட்டச் சொட்ட தூக்கிச் செல்லப்பட்டனர்.
அரியலூல் ஜூலை 3ம் தேதி கண்ணகி சிலை திறக்கப்படவுள்ளது. இதையொட்டி கட்சியின் மூத்த தலைவர்கள்வருகை தரவுள்ளனர். இந்த சிலை சிறப்பு நிகழ்ச்சி தொடர்பான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க திமுக செயல்வீரர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளரும், மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சருமான ராஜா தலைமையில்கூட்டம் நடந்தது.
செந்துறை யூனியன் திமுக செயலாளர் செல்லக்கண்ணு கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்.
கூட்டம் தொடங்கியவுடன், ஞானமூர்த்தி என்பவரின் ஆதரவாளர்கள் எழுந்து, அரியலூர் மாவட்ட முன்னாள்திமுக செயலாளர் சிவசங்கர் குறித்து சில கருத்துக்களைக் கூறினார்.
அப்போது சிவசங்கர் தனது ஆதரவாளர்களோடு கூட்டத்திற்கு வந்தார். ஞானமூர்த்தி மற்றும் அவரதுஆதரவாளர்கள் கூறியதற்கு எதிர்ப்பு தெவித்து சிவசங்கர் ஆதரவாளர்கள் பேசினர்.
இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி அடிதடிஉண்டானது. இரு கோஷ்டியினரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர், இருக்கைகள் பறந்தன.
பலருக்கும் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. சமாதானம் செய்ய முயன்ற திமுகவினருக்கும் அடி, உதைவிழுந்தது.
அதிர்ச்சியடைந்த அமைச்சர் ராஜா, ஞானமூர்த்தி கோஷ்டியினரை உடனடியாக கூட்டத்தை விட்டு வெளியேறுமாறுஉத்தரவிட்டார்.
மண்டை உடைந்தவர்களை இரு தரப்பினரும் தூக்கிச் சென்றனர். ஞானமூர்த்தி கோஷ்டியினர் வெளியேறிய பிறகுகூட்டம் அமைதி திரும்பியது. இதன் பிறகு தொடர்ந்து நடந்தது.