ரிசர்வ் செய்தும் இடமில்லை: ரயிலை நிறுத்திய பத்திரிக்கையாளர்கள்
சென்னை:
தனி பெட்டி ஒதுக்கப்பட்டிருந்தும், அதில் அமர்ந்து செல்ல இடமில்லாததால், ரயில்வே நிர்வாகத்தைக் கண்டித்துசென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் போராட்டம் நடத்தினர். ரயிலை நிறுத்தி போராட்டம்நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அசாம் மாநிலத் தலைநகர் குவஹாத்தியில், உழைக்கும் பத்திரிக்கையாளர் மாநாடு நடைபெறவுள்ளது. இதில்கலந்து கொள்வதற்காக திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வழியாக குவஹாத்தி செல்லும் ரயிலில்பத்திரிக்கையாளர்கள் சீட்களை ரிசர்வ் செய்திருந்தனர். அவர்களுக்குத் தனிப்பெட்டி ஒதுக்கப்பட்டது.
திருவனந்தபுரத்திலிருந்து 13 பத்திரிக்கையாளர்கள் மட்டுமே அந்தப் பெட்டியில் வந்தனர். இதையடுத்து மற்றபயணிகளையும் அந்தப் பெட்டியில் ஏற ரயில்வே அதிகாரிகள் அனுமதித்தனர்.
இந் நிலையில் ரயில் சென்னை வந்தபோது, தனிப் பெட்டியில் வேறு பயணிகள் இருப்பதையும், தங்களுக்குஇடமில்லாததையும் அறிந்த தமிழக பத்திரிக்கையாளர்கள் கொந்தளித்தனர். ரயிலை கிளப்ப விடாமல் நிறுத்தினர்.உடனடியாக தங்களுக்கு தனிப்பெட்டி ஒதுக்க வேண்டும் என்று கோரினர்.
இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள், பத்திரிக்கையாளர்களுக்கானதனிப் பெட்டியில், பத்திக்கையாளர்களுக்கு இட வசதி செய்து கொடுத்தனர்.
இதனால் கிட்டத்தட்ட 2 மணி நேர தாமதத்திற்குப் பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றது.