இளங்கோவன் ரொம்ப நல்லா செயல்படுறார்: சொல்கிறார் நல்ல பிள்ளை சோ.பா
தூத்துக்குடி:
எனக்கும், இளங்கோவனுக்கும் இடையே இருந்த எல்லாப் பிரச்சினைகளும் முடிந்து விட்டன. இப்போதுஇருவரும் சுமூகமாக செயல்பட்டுக் கொண்டுள்ளோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன்கூறியுள்ளார்.
தூத்துக்குடியில், காமராஜர் பிறந்த நூற்றாண்டு விழா தொடர்பான கருத்தரங்கம் நடந்தது. அதில் கலந்து கொண்டசோ.பா. பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
எனக்கும், இளங்கோவனுக்கும் இடையே இருந்து வந்த பிரச்சினைகள் முடிந்து விட்டன. அனைத்துப்பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டு விட்டது. நாங்கள் இருவரும் இப்போது சுமூகமாகப் பழகி வருகிறோம்.
இளங்கோவன் சிறப்பாக செயல்படுகிறார். அவரது எந்த நடவடிக்கைகளும் ஆட்சபேனைக்குரியதாக இல்லை.
சமீபத்தில் டெல்லி சென்றிருந்தபோது சோனியா காந்தியை சந்திக்க முடியவில்லை. மீண்டும் டெல்லிசெல்லும்போது சந்தித்துப் பேசுவேன் என்றார் அவர்.
டெல்லியில் இளங்கோவனைச் சந்தித்த சோனியா, சோ.பாவை சந்திக்காமல் திருப்பி அனுப்பிவிட்டார்.இளங்கோவனைச் சந்தித்தபோது கூட, இனி இருவரும் சண்டை போட்டால் ரெணடு பேர் பதவியும் காலியாகும்என்று எச்சரித்து அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.
இதனால் திடீரென இருவரும் நல்ல பிள்ளைகளாகி, சண்டை போடுவதை விட்டுவிட்டு மிக நெருங்கியநண்பர்கள் ஆகிவிட்டனர்.