For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாணவன் தற்கொலையில் ஆசியருக்கு ஜாமீன் மறுப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஆசிரியர் அடித்ததால் மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளசென்னை வேலம்மாள் மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் கண்ணப்பனுக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மைசெஷன்ஸ் நீதிமன்றம் மறுத்து விட்டது.

சென்னை மேற்கு முகப்பேர் பகுதியில் உள்ள வேலம்மாள் மேல் நிலைப்பள்ளி. இந்தப் பள்ளியில், படித்து வந்தவன்மாணவன் ராம் அபினவ். இவன் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டான். ஆசியர்கள் அடித்ததால்தான்மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக அவனது பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து வேலம்மாள் பள்ளி கணக்கு ஆசிரியர் கண்ணப்பன் கைது செய்யப்பட்டுள்ளார். தன்னைஜாமீனில் விடுதலை செய்யக் கோரி ஆசிரியர் கண்ணப்பன் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுசெய்திருந்தார்.

அதில், போலீஸாரின் முதல் தகவல் அறிக்கையில் எனது பெயர் சேர்க்கப்படவில்லை. அதேபோல, நான்தான்தனது சாவுக்குக் காரணம் என்று எனது பெயரை மாணவனும் குறிப்பிடவில்லை. எனக்கும், மாணவன் சாவுக்கும்சம்பந்தமில்லை. எனவே என்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி ஜெயபால், ஆசிரியரின் மனுவைத் தள்ளுபடி செய்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X