நான் தற்கொலைக்கு முயலவில்லை: டி.எம்.எஸ். மறுப்பு
சென்னை:
எரிசாராயத்தைக் குடித்து உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பழம்பெரும்பின்னணிப் பாடகர் டி.எம். செளந்தர்ராஜன், தான் தற்கொலைக்கு முயலவில்லை என்று கூறியுள்ளார்.
எரிசாராயத்தைக் குடித்து மிகவும் ஆபத்தான நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டஅவரது அவரது உடல் நிலை தேறி வருகிறது.
இந் நிலையில் நிருபர்களையும் அவர் சந்தித்தார். அவர் கூறுகையில், நான் தற்கொலைக்கு முயலவில்லை.காயத்துக்கு போட வைத்திருந்த ஸ்பிரிட்டை, இருமல் மருந்து என்று நினைத்து தவறுதலாகக் குடித்துவிட்டேன்.
அதைக் குடித்த ஒரு மணி நேரம் கழித்துத் தான் நெஞ்சு எரிய ஆரம்பித்தது. மயக்கமும் வாந்தியும் வந்தது. உடனேஇங்கே கொண்டு வந்து சேர்த்துவிட்டார்கள்.
என் உடல் நிலை பாதிக்கப்பட்டதை அறிந்து உலகின் பல பகுதிகளில் இருந்தும் தமிழர்கள் தொடர்ந்துதொலைபேசியில் தொடர்பு கொண்டு, உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். இதனால் மிகவும்நெகிழ்ந்துபோய் உள்ளேன் என்றார்.
ஆனால், இது தற்கொலை முயற்சியா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடந்து வருகிறது.
எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் ஆகியோரின் குரல்களாக திரையுலகில் கொடி கட்டிப் பறந்தவர் டி.எம்.எஸ். என்றுஅன்புடன் அழைக்கப்படும் டி.எம்.செளந்தரராஜன். 81 வயதாகும் டி.எம்.எஸ். கடந்த 50 ஆண்டுகளாக சினிமாப்பாடல்கள், பக்திப் பாடல்களை பாடி வருகிறார்.
கிட்டத்தட்ட 30,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளவர் டி.எம்.எஸ். 3 திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவரதுமுருகன் பக்திப் பாடல்கள் ஒலிக்காத தமிழர் வீடுகளே இல்லை எனலாம்.