வீரப்பன் அபாயம்: வனப் பகுதிக்கு அருகே செல்ல எம்.பி, 2 எம்.எல்.ஏக்களுக்கு தடை

Subscribe to Oneindia Tamil

சத்தியமங்கலம்:

வீரப்பனின் கடத்தல் திட்டம் அம்பலமாகியுள்ளதால், கர்நாடகத்தைத் தொடர்ந்து தமிழக அரசும் வி.ஐ.பிக்களுக்குபுதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. காட்டுப் பகுதிக்குச் செல்ல ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த எம்.பி. மற்றும்எம்.எல்.ஏக்களுக்கு அரசு தடை விதித்துள்ளது.

சந்தனக் கடத்தல் வீரப்பன் முக்கியப் புள்ளிகளை கடத்தத் திட்டமிட்டிருப்பதாக கர்நாடக உளவுப் பிரிவினருக்குத்தகவல் கிடைத்துள்ளது. மேலும் வனப் பகுதியில் கடும் மழை பெய்து வருவதால் அதிரடிப்படையினரின் தேடுதல்வேட்டையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் வீரப்பன் காட்டுப் பகுதிகளை ஒட்டிய பகுதிகளுக்குள் எளிதில் நடமாட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து வனப் பகுதிகளுக்கோ, அதை ஒட்டிய பகுதிகளுக்கோ செல்ல வேண்டாம் என வி.ஐ.பிக்கள்,அரசியல்வாதிகள், அதிகாரிகள், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு கர்நாடகம் எச்சரிக்கைவெளியிட்டுள்ளது.

அப்படியே போக வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும் போலீஸ் பாதுகாப்புடன் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது.

இந் நிலையில் இதே எச்சரிக்கையை தமிழக அரசும் பிறப்பித்துள்ளது. குறிப்பாக வனப் பகுதியை ஒட்டியுள்ளகோபிசெட்டிப்பாளையம் எம்.பி, மற்றும் 2 எம்.எல்.ஏக்கள் காட்டுக்குள் செல்லவும், வனப் பகுதிகளை ஒட்டியஇடங்களுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோபிசெட்டிப்பாளையம் எம்.பி காளியப்பன், சத்தியமங்கலம் எம்.எல்.ஏ. கந்தசாமி, பவானி எம்.எல்.ஏ. சிதம்பரம்ஆகியோர் வீரப்பனின் கடத்தல் லிஸ்டில் இருப்பதாகவும், எனவே எக் காரணம் கொண்டும், வீரப்பன் நடமாட்டம்உள்ள காட்டுப் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என்றும் போலீசார் இவர்களுக்குத் தடை விதித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+