இளங்கோவன் ஜூலை 3; நாஞ்சில் சம்பத் ஜூலை 14
மதுரை:
முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில், காங்கிரஸ் செயல் தலைவர்இளங்கோவன் ஜூலை 3ம் தேதியும், மதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் 14ம் தேதியும்ஆஜராக வேண்டும் என்று மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தமபாளையத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசியதாகஇளங்கோவன் மீது மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு வருகிற ஜூலை3 ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
அன்றைய தினம் ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே இளங்கோவனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந் நிலையில், வைகோ கைதை எதிர்த்து மதுரையில் ஜனவரி 2ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் அவதூறாகப்பேசியதாக நாஞ்சில் சம்பத் மீது போலீஸார் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் ஜூலை 14ம் தேதி நேரில்ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சம்மன் அனுப்ப நீதிபதி சிவப்பிரகாசம் உத்தரவிட்டார்.