தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறைந்தது: கடலோரக் காவல் படை தகவல்
சென்னை
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுடுவது குறைந்து விட்டதாக இந்திய கடலோர காவல் படையின்கிழக்குப் பிரிவு கமாண்டர் வாசன் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்திய, இலங்கை கடல் எல்லையில், கடலோரக் காவல்படையினர் தற்போது தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழக மீனவர்கள் மீது இலங்கைகடற்படையினர் தாக்குதல் நடத்துவது வெகுவாகக் குறைந்து விட்டது.
மேலும், தமிழக மீனவர்கள் இந்திய எல்லையைக் கடந்து விடாமலும் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
மீனவர்கள் கடலுக்குள் செல்லும்போது உயிர் காக்கும் கருவிகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்அவர்.
காசி மேடு மீனவர்கள் 6 பேர் மாயம்:
இதற்கிடையே, சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 6 மீனவர்களைக்காணவில்லை.
காசிமேட்டிலிருந்து ரஞ்சன், கனகராஜ், நாகராஜ் உள்ளிட்ட 6 மீனவர்கள் கடந்த 12ம் தேதி மீன் பிடிக்கச் சென்றனர்.ஓரு நாட்களில் திரும்பியிருகக வேண்டிய அவர்கள் இதுவரை கரை சேரவில்லை. இதையடுத்து துறைமுகம் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.