மீண்டும் போருக்கு தயாராகின்றனர் புலிகள்: சந்திரிகா
கொழும்பு:
விடுதலைப் புலிகள் போருக்குத் தயாராகி வருவதாகவும், அதைச் சந்திக்க ராணுவம் தயார் நிலையில் இல்லைஎன்றும் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறியுள்ளார்.
சந்திரிகாவின் செய்தித் தொடர்பாளர் ஹரிம் பெரிஸ் நிருபர்களிடம் கூறுகையில், 1995ம் ஆண்டில் அரசுடன்நடத்திய அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இருந்து புலிகள் திடீரென விலகிவிட்டு போரை ஆரம்பித்தனர்.அதையே தான் இப்போதும் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
நிறைவேற்றவே முடியாத கோரிக்கைகளை முன் வைத்து வரும் புலிகள், அதே நேரத்தில் ஆயுதங்களையும் குவிக்கஆரம்பித்துவிட்டனர். தங்களது அரசியல் எதிரிகளைக் கொன்று குவிப்பதோடு, ராணுவத்தின் உளவுப் பிரிவின்திறனையும் முறியடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மீண்டும் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம். யாழ்பாணத்தைப் பிடிக்க புலிகள் பெரும் தாக்குதலைதிடீரென நடத்தினால் ராணுவத்தினரால் 10 நாட்களுக்கு மேல் சமாளிக்க முடியாது. அந்த அளவுக்குத் தான்ராணுவத்தினர் வசம் இப்போது ஆயுதங்கள் உள்ளதாக அதிபர் சந்திரிகா கருதுகிறார்.
புலிகள் எப்போது வேண்டுமானாலும் போரைத் தொடங்கலாம் என்றார் அவர்.