For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அழகிரிக்கு எதிராக வாதாட புதிய அரசு வக்கீல் நியமனம்: பிரேமானந்தா வழக்கில் ஆஜரானவர்

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைதாகியுள்ள அழகிரிக்கு எதிராக வாதாட அரசுத் தரப்பில் வழக்கறிஞர்கந்தசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பிரேமானந்தா வழக்கிலும், ராகிங்கால் கொலை செய்யப்பட்ட மாணவன்நாவரசு வழக்கிலும் அரசின் சார்பில் ஆஜரானவராவார்.

ஏற்கனவே மதுரை மாவட்ட நீதிபதியாகவும் இருந்தவர்.

இந் நிலையில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அழகிரியிடம் திருட்டு வீடியோ தடுப்பு போலீஸார்விசாரணை நடத்தியுள்ளனர்.

மதுரை, மத்திய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள அழகிரிக்குச் சொந்தமான ராயல் வீடியோ கடையில் உரிமம்பெறாத திருட்டு விசிடிக்களை போலீசார் கைப்பற்றினர். இந்த வழக்கில் அழகிரியிடம் விசாரிக்க நீதிமன்றம்போலீசாருக்கு அனுமதி தந்தது.

இதையடுத்து திருச்சி சிறையில் வைத்து ஜெயிலர் மற்றும் வழக்கறிஞர் முன்னிலையில் அழகிரியிடம் போலீசார்விசாரணை நடத்தினர். மதுரை திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல் ரஹீம், திருச்சிதிருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீஸார் இந்த விசாரணையைநடத்தினர்.

ஸ்டிரைக் எதிரொலி: அழகிரி ஆஜர் இல்லை

இதற்கிடையே, தா. கிருட்டிணன் கொலை வழக்கில் கைதான அழகிரியின் காவல் நேற்றுடன் முடிந்தது.இதையடுத்து அவர் மதுரை 6வது குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவல் நீட்டிப்புசெய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் அரசு ஊழியர் போராட்டத்தில் நீதிமன்ற ஊழியர்கள் முழு அளவில் பங்கேற்றதாலும், பெரும்பாலானபோலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாலும் அழகிரியை நீதிமன்றத்துக்குக் கொண்டு வர முடியாதநிலை இருப்பதாகக் கூறி அவரது காவலை நீடிக்க வேண்டும் என போலீஸார் மனு செய்தனர்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி வனிதா, அழகிரி ஆஜர்படுத்தப்படாமலேயே அவரது காவலை ஜூலை 16ம் தேதிவரை நீட்டித்து உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X