தலித் உரிமையை பெற்றுத் தருவாரா சங்கராச்சாரியார்?: கிருஷ்ணசாமி கேள்வி
காரைக்குடி:
தலித் மக்களின் உரிமையை பெற்று தர சங்கராச்சாரியார் கண்டதேவி தோரோட்டத்துக்கு வருகை தர வேண்டும்என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளர்.
இந் நிலையில் காரைக்குடியில் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
கண்டதேவி தோரோட்டத்தின் போது அனைத்து தரப்பு மக்களும் தேர்வடம் பிடித்து இழுக்க அனுமதிக்கப்படவேண்டும். உயர்நீதிமன்ற தீர்ப்பு, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் தீர்ப்பு ஆகியவற்றை அமல்படுத்தவேண்டும். இதுவரை இத் தீர்ப்புகளை மதிக்காத இன்னொகு ஜாதியினர் தலித் மக்களை அவமதித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு அந்த ஜாதியினரை மட்டும்ே காலை 10 மணிக்கே அழைத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ்,தலித் பிரிவினரை திட்டமிட்டு ஒதுக்கிவிட்டு, தேரோட்டத்தை நடத்தினர். இந்த ஆண்டு அதுபோல சட்டமீறல்நடக்க கூடாது.
இது மனித உரிமை மீறல் மட்டுமல்ல. அரசியல் சட்டத்தை அவமதிக்கும் செயலும் ஆகும். கண்டதேவிதேரோட்டத்திற்கு வெளி ஆட்கள் வரக்கூடாது என்று அறிவித்த மாவட்ட நிர்வாகம் கடந்த முறை குறிப்பிட்டபிரிவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை மட்டும் எப்படி அனுமதித்து?
அனுமதித்தால் இரு பிரிவைச் சேர்ந்த பிரமுகர்களையும் எம்.எல்.ஏ.க்களையும் அனுமதிக்க வேண்டும்.
இந்தியா என்பது ஒரே நாடுதான. இதற்குள்ளேயே அரசியல் சட்டத்திற்கு எதிரான சமூக அமைப்பைவைத்திருப்பவர்களோடு மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்துவதே தவறானதாகும்.
சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதாக கூறிக்கொண்டு போலீஸாரே வெள்ளை உடைகளையும், காக்கி உடைகளையும்அணிந்து கொண்டு தலித்களை புறக்கணித்து கடந்த ஆண்டு தோரோட்டத்தை நடத்தினர்.
இந்த ஆண்டும் எங்களுக்கு தொடர்ந்து அநீதி விளைவித்தால் கடும் விளைவுகள் ஏற்படும். மக்களின் வரிப்பணத்தை சம்பளமாக பெறும் அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக நடக்க கூடாது.
இந்து- முஸ்லீம் சமாதானத்தைப் பற்றியும் மத மாற்றத் தடை சட்டம் பற்றியும் பேசும் சங்கராச்சாரியார், இந்துமதத்திற்குள்ளேயே உள்ள சமூக அநீதிகளைக் களைய முயற்சி எடுக்க வேண்டியது தானே?
இந்து மதத்தின மீது உண்மையான விசுவாசம் அவருக்கு இருந்தால் இந்த முறை கண்டதேவிக்கு வந்து தலித்மக்களின் உரிமையினை பெற்றுத் தந்து தேர் வடம் பிடிக்கச் செய்ய வேண்டும் என்றார் கிருஷ்ணசாமி.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications