For Quick Alerts
For Daily Alerts
Just In
பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தவர்கள் மீது லாரி மோதல்: 4 பெண்கள் பலி
திண்டுக்கல்:
பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள் மீது படு வேகமாக வந்த லாரி மோதியது. இதில் மகளிர் சுய உதவிக் குழுஉறுப்பினர்கள் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பத்து மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள், சீலப்பாடியில் நடந்தபயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.
பின்னர் அனைவரும் மாலை 4 மணிக்கு தங்களது வீடுகளுக்குத் திரும்ப பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தனர்.அப்போது படுவேகமாக வந்த ஒரு லாரி, பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் லீமா ரோசலின், முருகேஸ்வரி, செல்வராணி, மீனாட்சி ஆகிய பெண்களும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
Comments
Story first published: Wednesday, July 16, 2003, 5:30 [IST]