மாயமான இன்ஸ்பெக்டர்: போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
ஈரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி கிருஷ்ணன் மாயமானது தொடர்பாக வரும் திங்கள்கிழமைக்குள் பதில்மனு தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு நகராட்சித் துணைத் தலைவரும் அதிமுக தாதாவுமான பாலகிருஷ்ணன் படுகொலை வழக்கை விசாரித்துவந்தவர் கருங்கல்பாளையம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜோதி கிருஷ்ணா. இவர், திமுக முன்னாள் எம்.பி.கே.பி.ராமலிங்கத்தின் தம்பியார்.
இந் நிலையில் வழக்கு தொடர்பான விசாரணைக்காக சென்ற ஜோதி கிருஷ்ணா கடந்த 28ம் தேதி முதல்காணவில்லை. இதுதொடர்பாக அவரது மனைவி, மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் புகார்கொடுத்தார். ஆனால் எந்தப் பலனும் இலலை.
அவரைத் தேடுவதில் போலீசார் மெத்தனம் காட்டி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கே.பி.ராமலிங்கம் ஹேபியஸ் கார்பஸ் (நீதிமன்றத்தில் ஆளைகொண்டு வந்து நிறுத்த வேண்டி மனு) மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் ஜெயசிம்ம பாபு மற்றும் தணிகாச்சலம் ஆகியோர், இது தொடர்பாகவரும்திங்கள்கிழமைக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டனர்.