For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீதிமன்றத்துக்கு வந்த கொலைக் கைதி வெட்டிக் கொலை

By Staff
Google Oneindia Tamil News

வந்தவாசி:

வந்தவாசியில் பட்டப் பகலில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர் வெட்டி கொல்லப்பட்டார். மேலும் 2 பேர்ஆபத்தான நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வந்தவாசியை அடுத்து தென்னாங்கூரை சேர்ந்தவர் பால்துரை. இவர் கடந்த 8 மாதத்துக்கு முன் கொலைசெய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் அதே ஊரைச் சேர்ந்த முருகன்(வயது 22), சஞ்சீவி(வயது 21),சேம்பன்(வயது 21) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை வந்தவாசி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவர்கள் மூவரும் ஜாமீனில் வெளியேவந்துள்ளனர். வழக்குக்காக மூவரும் வந்தவாசி நீதிமன்றத்துக்கு வந்தனர்.

காஞ்சிபுரம் சாலையில் வந்து கொண்டிருந்தபோது ஒரு கும்பல் அவர்களை வழிமடக்கி சரமாரியாக வெட்டியது.இதில் முருகன் அதே இடத்தில் இறந்தார். மற்ற இருவரும் பலத்த காயமடைந்தனர்.

அவர்கள் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பால்துரையின் கொலைக்குப் பழி வாங்கவே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X