பாடம் நடத்தியபோது ஆசிரியர் மாரடைப்பில் பலி
ஈரோடு:
பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு அரசுப் பள்ளியின் ஆசிரியர் மரணமடைந்தார்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர்ஜெரால்டு. ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் வழக்கம் போல பணிக்கு வந்துகொண்டிருந்தார்.
இந் நிலையில் வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தபோது அவருக்கு நெஞ்சு வலித்துள்ளது. இருப்பினும்தொடர்ந்து பாடம் நடத்தியுள்ளார். வலி அதிகமாகவே, தண்ணீர் குடித்து விட்டு தொடர்ந்து பாடம் நடத்தினார்.
இந் நிலையில் வலி அதிகமாகி மயங்கி விழுந்தார். உடனடியாக பணிக்கு வந்திருந்த பிற ஆசிரியர்களும்,மாணவர்களும் ரொல்டை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அதற்குள்ஜெரால்டு இறந்து விட்டார்.
ஸ்டிரைக்கில் கலந்து கொள்ளாமலும், நெஞ்சு வலித்தபோதும் கூட தொடர்ந்து பாடம் நடத்தி தனது கடமையில்தவறாத ஆசிரியர் ஜெரால்டின் மரணம் பள்ளியிலும் அந்தப் பகுதியிலும் சோகத்தை ஏற்படுத்தி விட்டது.