For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் அழகிரி மனு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைதாகியுள்ள மு.க.அழகிரி ஜாமீன் வழங்கக் கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.

மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் இவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து அழகிரி தற்போது ஜாமீன்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார். அவருக்கு சிறையில் கடும் வயிற்றுப் போக்குடன் பல்வேறுஉடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதனால் எப்படியாவது தன்னை ஜாமீனில் எடுக்குமாறு சமீபத்தில் தன்னைச் சந்தித்த தாயார் தயாளுவிடம் அழகிரிகூறியுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து அழகிரி சார்பில் உயர் நீதிமன்றத்தில் அவரது குடும்பத்தினர் இப்போதுஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், தா.கி. கொலையில் முதல் தகவல் அறிக்கையில் (எப்.ஐ.ஆர்.) எனது பெயர் குறிப்பிடப்படவில்லை.அதே போல விசாரணையின்போதும் எனது பெயரை யாரும் குறிப்பிடவில்லை.

விசாரணை அறிக்கையிலும் கூட இறந்தவருக்கும், திமுக முக்கியஸ்தர் ஒருவருடன் மோதல் இருந்தது. இது கட்சித்தேர்தலின்போது எதிரொலித்தது. இதையடுத்து சிலரது தூண்டுதலின் பேரில், சிலர் சேர்ந்து தா.கிருட்டிணனைக்கொன்று விட்டதாகத்தான் கூறப்பட்டிருந்தது. எனது பெயர் எங்கும் கூறப்படவில்லை.

உண்மையான குற்றவாளியைக் கைது செய்வதை விடுத்து என்னைக் கைது செய்து, அதன் பிறகு எனக்கு எதிராகசாட்சியங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது காவல்துறை. எனவே என்னைக் கைது செய்தது தவறு. உடனடியாகஎனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார் அழகிரி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X