ஆகஸ்டில் அதிமுக செயற்குழு கூட்டம்: களையெடுப்பு தீவிரமாகும்
சென்னை:
அதிமுக செயற்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 4ம் தேதி நடக்கவுள்ளதாக முதல்வரும், கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், அதிமுக செயற்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 4ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும்.
இதற்காக அன்ைதது செயற்குழு உறுப்பினர்களுக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த அழைப்பிதழ்களுடன் அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் தவறாமல் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
அரசு ஊழியர் போராட்டத்தின்போது கட்சியின் நடந்து கொண்ட முறை, நாடாளுமன்றத் தேர்தல், உட்கட்சி விவகாரங்கள் ஆகியவை குறித்து இதில் முழுமையாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
ஏற்கனவே மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அவ்வப்போது நீக்கப்பட்டு வருகின்றனர். இந் நிலையில் செற்குழுக் கூட்டத்துக்குப் பின் கட்சியில் பெரும் அளவில், அதிரடியான களையெடுப்பு நடக்கும் என்று கூறப்படுகிறது.
-->