சென்னையில் ஓட்டலுக்குள் புகுந்த அரசு பஸ் மோதி 3 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில், அதி வேகமாக சென்று கொண்டிருந்த லாரியை ஓவர்டேக் செய்து முந்த முயன்ற அரசு பஸ்,கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த ஹோட்டலுக்குள் புகுந்தது. இதில் 3 பேர் பரிதாபமாகஉயிரிழந்தனர்.

சென்னை, கோயம்பேடு வெளியூர்ப் பேருந்து நிலையம் அருகே இந்த பயங்கர சம்பவம் இன்று காலை நடந்தது.செங்குன்றத்திலிருந்து கிண்டி நோக்கி சி-70 நகர பேருந்து வந்து கொண்டிருந்தது.

வெளியூர்ப் பேருந்து நிலையம் அருகே வேகமாக வந்த பஸ், எதிரே சென்று கொண்டிருந்த லாரியை முந்தமுயன்றது. ஏற்கனவே லாரி அதி வேகமாக சென்று கொண்டிருந்தது. அதை விட பயங்கர வேகமாகச் சென்றுலாரியை முந்த பஸ் டிரைவர் முயன்றார்.

அப்போது தனது கட்டுப்பாட்டை டிரைவர் இழந்தார்.

படு வேகமாக ஓடிய பஸ் சாலையோரம் இருந்த ஹோட்டலுக்குள் புகுந்தது. இதில் ஹோட்டல் உடைந்துநொறுங்கியது. ஹோட்டலில் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிபலியாயினர்.

மேலும் ஒருவர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது இறந்தார். மேலும் 2பேர் படு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து பஸ்சின் டிரைவர் கைது செய்யப்பட்டார். அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

இச் சம்பவத்தால் கோயம்பேடு பஸ் நிலையப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சாலையில் பஸ், லாரிகள் போன்றவை அதி வேகமாக செல்வதால் மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்கள்போன்றவை மிகவும் பீதியுடன்தான் செல்ல வேண்டியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+