குடிநீருக்காக பவானி, அமராவதி அணைகள் திறப்பு
சென்னை:
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, முதல்வர் ஜெயலலிதவின் உத்தரவின் பேரில், அமராவதி மற்றும் பவானிஅணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
உடுமலைப்பேட்டை, கரூர், தாராபுரம் பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் தங்களது பகுதியில்அணைகளைத் திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து மக்களின் கோரிக்கையை ஏற்று அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.அடுத்த பத்து நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.
இதேபோல, ஈரோடு, சத்தியமங்கலம், கோபிச்செட்டிப்பாளையம், பவானி மற்று 23 டவுன் பஞ்சாயத்துக்களைச்சேர்ந்த பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பவானி சாகர் அணையிலிருந்து தண்ணீர் திறன்து விடப்பட்டுள்ளது.
இரு அணைகளின் நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைவார்கள்என்று முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.