For Quick Alerts
For Daily Alerts
Just In
வருமான வரி அதிகாரி வீட்டில் சி.பி.ஐ. ரெய்டு
சென்னை:
சென்னையில் வருமான வரித்துறையின் மூத்த அதிகாரியின் வீட்டில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறையின் தலைமை அலுவலகத்தைச் சேர்ந்த கூடுதல்கமிஷனர் தனது வருவாயை மீறி சொத்து குவித்துள்ளதாகவும், 2000ம் ஆண்டில் இணை கமிஷனராகபணியாற்றியபோது தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
வரி ஏய்ப்பில் ஈடுபட்ட சினிமா தயாரிப்பாளருக்கு சாதகமாக நடந்து கொண்ட, இவர் மீது சதி மற்றும் கிரிமினல்குற்றங்களில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் ஏற்கனவே வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றன.
இந் நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள அந்த அதிகாரியின் வீட்டில் சி.பி.ஐ., ஊழல் தடுப்பு பிரிவுஅதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.
Comments
Story first published: Sunday, July 20, 2003, 5:30 [IST]