மதுரை-மானாமதுரை அகல ரயில் திடத்திற்கு ரூ 50 கோடி ஒதுக்கீடு!
மதுரை:
மதுரை-மானாமதுரை அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு ரூ. 50 கோட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகமத்திய ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் 26 ரயில்வே மேம்பாலங்கள் கட்ட மாநில அரசுஒப்புதல் கொடுத்துள்ளது. மேலும், 50 மேம்பாலங்கள் கட்ட அனுமதி கோரப்பட்டிருக்கிறது. அரசு அனுமதிகிடைத்தவுடன் பணிகள்தொடங்கும்.
மதுரை-மானாமதுரை, ராஜபாளையம்-தென்காசி அகல ரயில் பாதைப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச்மாதத்திற்குள் முடியும்.
இதுதவிர விழுப்புரம்-பாண்டிச்சேரி, வடலூர்-கடலூர், தாம்பரம்-செங்கல்பட்டு, அண்ணா நகர்-வில்லிவாக்கம்,பட்டாபிராம்-திருவள்ளூர், மயிலாப்பூர்-தரமணி, தஞ்சாவூர்-கும்பகோணம் ஆகிய ரயில் பாதை பணிகளும்விரைவில் முடிவடையவுள்ளன.
மதுரைக்கும், ராமேஸ்வரத்திற்கும் இடையே அமைக்கப்படவுள்ள அகல ரயில் பாதை, அதன் பின்னர் தனுஷ்கோடிவரைக்கும் நீட்டிக்கப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications