மீனாட்சி அம்மனுக்கு தினமும் வைகை நீரில் அபிஷேகம்: கோவில் நிர்வாகம் முடிவு
மதுரை:
ஆலவாய் அன்னை என்று துதிக்கப்படும் மதுரை மீனாட்சி அம்மனுக்கு, தினசரி வைகை ஆற்றிலிருந்து தண்ணீர்எடுத்து வந்து அபிஷேகம் செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம் செய்வதற்காக, வைகை ஆற்று நீர், யானை மீது வைத்துக் கொண்டு வரப்படும்முறை பல ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் இருந்தது.
ஆகம விதிப்படி அவ்வாறு செய்யப்பட்டு வந்தது. ஆனால் வைகையில் நீர் வற்றி விட்டதால் அந்த முறைகைவிடப்பட்டது.
தற்போது அந்த முறையை மீண்டும் நடைறைப்படுத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதற்காக யானைக்கல் பாலம் பகுதியில் ரூ. 15,000 செலவில் வைகை ஆற்றில் கிணறு தோண்டி அதிலிருந்து நீர்எடுக்கப்பட்டு, யானை மீது வைத்து கோவிலுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அம்மனுக்கும்,சோமசுந்தரேஸ்வரருக்கும் அபிஷேகம் செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கோவில் செயல் அதிகாரிபாஸ்கரன் கூறியுள்ளார்.