பி.இ: 20,000 சீட்களுக்கு சேர ஆளில்லை!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சிங்கிள் விண்டே முறையில் பொறியியல் மாணவர் சேர்க்கை முடிவடையவுள்ள நிலையிலும், பல்வேறு தனியார்கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப மறு கவுன்சிலிங் எல்லாம் நடத்தப்பட மாட்டாது என அண்ணாபல்கலைக்கழகம் கூறிவிட்டது.

இதனால் மறு கவுன்சிலிங் நடத்த வைத்து அடிமாட்டு விலையில் இந்த சீட்களை மாணவர்களின் தலையில்எப்படியாவது கட்டிவிட்டு விடலாம் என்ற தனியார் கல்லூரிகளின் கனவில் மண் விழுந்துள்ளது.

தமிழகப் பொறியியல் கல்லூரிகளில் உள்ள 46,000 இடங்களில் இதுவரை பாதி சீட்கள்தான் ஒற்றைச் சாளரமுறையில் நிரப்பப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 20,000 மாணவர் இடங்கள் காலியாக உள்ளன. கடந்த ஆண்டுஇதேபோன்ற நிலை ஏற்பட்டபோது, மறு கவுன்சிலிங் வைத்து காலியிடங்கள் நிரப்பப்பட்டன.

இந் நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பாலகுருசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒற்றைச்சாளர முறையிலான கவுன்சிலிங் முடிந்ததும், மீதமுள்ள இடங்களை நிரப்புவதற்கு மறு கவுன்சிலிங் நடத்துவது என்றபேச்சுக்கே இடமில்லை.

திட்டமிட்டபடி குறித்த காலத்திற்குள் கவுன்சிலிங் முடிக்கப்படும் என்றார். கவுன்சிலிங் 27ம் தேதியுடன்முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கவுன்சிலிங் முடியும்போது 20,000 இடங்கள் காலியாகவே இருக்கும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+