கோவையிலும் கஞ்சா சாக்லேட்டுகள்: ராஜஸ்தான் வாலிபர் கைது

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

Seized Ganja Chocllates and arrested youth

பிடிபட்ட கஞ்சா சாக்லெட்டுகள் அதை விற்ற துக்காரம்
சென்னையைத் தொடர்ந்து கோயம்புத்தூரிலும் கஞசா அடங்கிய போதை சாக்லெட்டுகள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீப காலமாக சென்னையில், குறிப்பாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கிலோ கணக்கில் கஞ்சா சாக்லேட்டுகள்பிடிபட்டு வருகிறது. பான்பராக் போன்ற வஸ்துக்களை விற்று காசு பார்த்து வந்த வட இந்தியக் கும்பல்களுக்குதமிழகத்தில் விதிக்கப்பட்ட தடையால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மேலும் பான்பராக் உள்ளிட்ட வஸ்துக்கள் கிடைக்காமல் ஏங்கி வருபவர்களைக் குறி வைத்து கஞ்சா அடங்கியசாக்லேட்டுகளை தமிழகத்தில் இந்தக் கும்பல்கள் குவித்து வருகின்றன.

வட இந்தியாவில் இருந்து வரும் ரயில்களில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறக்கப்படும் மூட்டைகளில்இந்த சாக்லேட் மூட்டைகளும் வந்திறங்குகின்றன.

இந் நிலையில் தமிழகத்தின் பிர பகுதிகளிலும் இந்த கஞ்சா சாக்லேட் சப்ளை தொடங்கியுள்ளது. இதையடுத்துமாநிலம் முழுவதுமே தமிழக போதைத் தடுப்பு போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந் நிலையில் கோவையில் ராஜஸ்தானைச் சேர்ந்த துக்காராம் என்பவன் கஞ்சா சாக்லேட்களை விற்று வருவதைஅறிந்து அவனிடம் மப்டியில் சென்ற காவலர் ஒருவர், சாக்லேட்டை வாங்கினார். அதில் கஞ்சா இருப்பதுஉறுதியானவுடன் அவனை போலீசார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.

அவனிடம் இருந்து 1.3 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ரயில் நிலையம், பஸ் நிலையம்,கல்லூரிகள், பள்ளிகள் ஆகியவற்றின் அருகே இவன் இந்த சாக்லேட்டுகளை விற்று வந்தான்.

கள்ள நோட்டு டாக்டர் கைது:

கள்ள நோட்டு வியாபாரத்தில் ஈடுபட்ட ஹோமியோபதி டாக்டர் உள்ளிட்ட 4 பேர் கும்பலை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

Fake currency racket gangகன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் கள்ள நோட்டுக் கும்பல் நடமாடுவதாகபோலீஸாருக்குத் தெரியவந்தது. இதையடுத்து தக்கலையில் உள்ள ஒரு இடத்திற்கு போலீஸார் மாறு வேடத்தில்சென்றனர்.

அங்கு மறைவான இடத்தில் இருந்த கள்ள நோட்டுக் கும்பலை அணுகிய போலீஸார்,


(படம்- நன்றி தினகரன்)

தங்களுக்கு கள்ளநோட்டுக்கள் வேண்டும் என்று தெரிவித்தனர்.

அப்போது ரூ. 2 லட்சம் நல்ல நோட்டுக்கள் தந்தால் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுக்களைத் தருவதாகஅவர்கள் கூறினர். இதைத் தொடர்ந்து அந்தக் கும்பலை போலீஸார் கைது செய்தனர்.

அவர்களில் ஒருவர் ஹோமியோபதி டாக்டர் என்று விசாரணையின்போது தெரியவந்தது. இவர்களில் 3 பேர்கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+