நக்கீரன் கோபால் மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
பெரம்பலூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் அசோக் ராஜ். இவர் கடந்த 1993ம் ஆண்டுபுறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்தது தொடர்பாக நக்கீரன் வார இதழில் செய்தி வெளியானது.
இதைத் தொடர்ந்து கோபால், நக்கீரன் நிருபர், இரண்டு கிராம நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் மீது சென்னைஎழும்பூர் நீதிமன்றத்தில் அசோக் ராஜ் வழக்குப் பதிவு செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி தர்மராஜ், கோபால் உள்ளிட்டவர்கள் மீதான அவதூறு வழக்கை தள்ளுபடி செய்துஉத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications