ஜெ. தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: இளங்கோவனை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு
மதுரை:
தமிழக அரசு தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி தமிக காங்கிரஸ் செயல்தலைவர் இளஙகோவன் தாக்கல் செய்த மனுவை மதுரை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
2002ம் ஆண்டு அக்டோபரில் உத்தமபாளையம் பஞ்சாயத்து இடைத் தேர்தலின்போது பிரச்சாரம் செய்தஇளங்கோவன், முதல்வர் ஜெயலலிதாவை மிகவும் தரக் குறைவாரக பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி மதுரை செசன்ஸ் நீதிமன்றத்தில் இளங்கோவன் மனு தாக்கல்செய்திருந்தார். ஆனால், அதை விசாரித்த நீதிபதி, இளங்கோவனின் பேச்சு முதல்வரை அவமதிக்கத்தக்கவகையிலும் அமைந்துள்ளது. இதனால் அவரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது என்றார்.
அதே நேரத்தில் இந்த வழக்கில் ஒவ்வொரு முறையும் விசாரணைக்காக இளங்கோவன் ஆஜராக வேண்டியதில்லை,நீதிமன்றம் அழைத்தால் மட்டும் வந்தால் போதும் எனவும் நீதிபதி அறிவித்தார்.
இந் நிலையில் இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு விலக்கு அளிக்க வேண்டும்என்று கோரி அரசு வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவின் மீதான விசாரணைய நீதிபதி ஆகஸ்ட் 1ம்தேதிக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.












Click it and Unblock the Notifications