For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

படிப்பு- 10ம் வகுப்பு; அனுபவம்- 20 ஆண்டுகள்; பார்த்தது- டாக்டர் தொழில்!!

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

10ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு, கடந்த 20 வருடங்களாக டாக்டராக தொழில் பார்த்து வந்த போலிடாக்டர் சேலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம், கோரிமேடு பகுதியில் லட்சுமி கிளினிக் என்ற மருத்துவமனை உள்ளது. இங்கு மகேஸ்வரி என்ற பெண்காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற வந்துள்ளார். அவருக்கு அங்கிருந்த "டாக்டர்" தனசசேகரன் ஊசி போட்டுமருந்து கொடுத்துள்ளார்.

ஆனால், வீட்டுக்கு வந்ததும் மகேஸ்வரிக்கு கால்களில் வலி எடுத்து, வீங்கி விட்டது. இதைத் தொடர்ந்துஉடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் மகேஸ்வரிக்கு தவறான மருந்துகள் கொடுக்கப்பட்டதைக் கணடுபிடித்தனர்.இதையடுத்து தனசேகரன் மீது போலிஸில் புகார் கொடுத்தார் மகேஸ்வரி.

புகாரின் பேரில் தனசேகரனின் மருத்துவமனையை போலீஸார் சோதனயிட்டனர். அவரது சான்றிதழ்களைக்கேட்டு சோதனையிட்டபோது தான் அவர் போலி டாக்டர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டார்.

வெறும் பத்தாவது மட்டுமே படித்துள்ள தனசேகரன் கடந்த 20 வருடங்களாக டாக்டராக இருந்து வந்துள்ளார்என்பது போலீஸாரையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X