For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெவுக்கு ஜால்ரா போட வேண்டாம்: எம்.எல்.ஏக்களுக்கு பா.ஜ.க. உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சட்டசபை விவாதங்களின்போது முதல்வர் ஜெயலலிதாவை தமிழ்த் தாய், சகலகலாவல்லி என்றெல்லாம் ஜால்ராஅடித்துப் பேசக் கூடாது என்று பாரதீய ஜனதாக் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சட்டமன்றக் கூட்டம் நடக்கும்போது அதிமுக எம்.எல்.ஏக்களே வெட்கப்படும் அளவுக்கு முதல்வர் ஜெயலலிதாவைவாழ்த்தி பா.ஜ.கவினர் அடிக்கும் ஜால்ரா ஓசை மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக எம்.எல்.ஏ. ராஜா வைக்கும்ஐஸ்சில் சட்டமன்ற வளாகமே குளிரில் நடுங்குகிறது.

அம்மா, தாயே, தெய்வமே, தலைவியே.. என்று பா.ஜ.க. எம்எல்ஏக்கள் அதிமுகவிரையே தூக்கி சாப்பிடுகின்றனர்.

இந்த ஜால்ராக்களுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்குமாறு பா.ஜ.க. தலைமை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அகில இந்திய செயலாளர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

சட்டசபை விவாதங்களின்போது ஜெயலலிதாவை தமிழ்த்தாய், சகலகலாவல்லி, புரட்சிப் பெண் என்றெல்லாம் புகழவேண்டாம் என கட்சி எம்.எல்.ஏக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

சட்டசபை பாரம்பரியப்படி, மாண்புமிகு முதல்வர் என்று மட்டுமே அவரை அழைக்க வேண்டும் என்று கட்சிஎம்.எல்.ஏக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நாடு ழுவதும் பொதுவான சிவில் சட்டம் கொண்டு வருவதை பாரதீய ஜனதாக் கட்சி ஆதக்கிறது. அனைத்துக்கட்சியினன் ஒத்துழைப்புடன் இந்த சட்டம் கொண்டு வரப்படும்.

திமுகவுடனான கூட்டணி சிக்கலில் தான் உள்ளது. கூட்டணி தர்மம் என்ற பேச்செல்லாம் இனி எடுபடாது.திமுகவுக்கு பா.ஜ.க. உரிய மரியாதை அளித்தும் கூட அந்தக் கட்சி தான் மாநில அளவில் உறவை முறித்துக்கொண்டது என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X