அட, மழைக்கு கூட ஒதுங்க முடியலப்பா!!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மழை பெய்ததால், ஒரு வீட்டின் முன்பு ஒதுங்கி நின்ற பெண்ணிடம், தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டுஓடியுள்ளனர் திருடர்கள்.
சென்னை அம்பத்தூர், புதூர் பகுதியைச் சேர்ந்தவர் எஸ்கின். இவர் தனது மகனை டியூஷன் முடித்து அழைத்து வந்துகொண்டிருந்தார். தனது தெருவுக்கு முந்தைய தெருவில் வந்து கொண்டிருந்தபோது மழை வந்து விட்டது.
இதனால் அங்குள்ள ஒரு வீட்டின் கீழ் ஒதுங்கி நின்றார். அப்போது நான்கு பேர் தங்களது முகத்தை மறைத்துக்கொண்டு மழைக்கு ஒதுங்குவது போல வந்தனர்.
வந்தவர்கள், திடீரென்று எஸ்கின் கழுத்தில் கிடந்த 7 பவுன்தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு கொட்டும்மழையில் ஓடித் தப்பிவிட்டனர்.
எஸ்கின், இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்துள்ளார். மழைக்குக் கூட ஒதுங்க விடமாட்டார்கள் போல்இருக்கிறது மெட்ராஸ் திருடர்கள்.












Click it and Unblock the Notifications